Sunday 10 August 2014

Tagged Under:

மருவத்தூர் அம்மாவே போற்றி போற்றி !

By: Unknown On: 02:09
  • Let's Get Social
  • தவியாய்த்  தவிக்கும் இதயத்தின்
            தாகம்  தீர்த்திட வந்தவளே
    புவிமேல் உனதருள் இல்லையெனில்
            பூவும் பிஞ்சும் தோன்றிடுமா !!
    கவியாய்ப் பொழிவேன் எந்நாளும்

       





    காவல் தெய்வம் நின் புகளை
    செவிதான் மகிழ வாழ்வனைத்தும்
           செம்      பட்டுடுத்திய அம்மாவே !


    மருவத் தூராள் எனக் கேட்டால்
       மலரும்   சிரிக்கும் தன்னாலே !
    புருவம்     வியந்து  பார்த்திடவே
       பூமிப்   பந்தாய்த் தெரிபவளே
    உருவம் உனது உருவமொன்றே
       உள்ளக் கதவைத் தட்டுதடி
    வருவோர் போவோர் அனைவருக்கும் -நல்
       வாழ்வு  அளிக்கும் அம்மாவே ..!!


    கொஞ்சும் மழலைக் குரல் கேட்டு
              கூட  வருவாய் என் தாயே
    நெஞ்சம்  இனிக்க நினைவுகளில் -நீ
          நித்தம்  இருந்தால் போதுமடி
    அஞ்சும்    மனநிலை மாறிவிடும்
        ஆத்தா உனதருள் கிட்டிவிட்டால்
    தொஞ்சும் போக வழியுண்டோ
       தோல்வி   எம்மைத் தழுவிடினும் !


    வேப்பிலைக்கு ஈடாக என்றும்
      வினைகள்        தீர்க்கும் பராசக்தி
    காப்பெடுக்கும் பக்தருக்கு   நீ
      கருணை           பொழியும் மகாசக்தி !
    பாப்புனைய வந்தேனே என்
      பகுத்தறிவை வளர்த்து விடு
    நாப்புரளும்       போ தெல்லாம்
         நல்ல        துணை யாபவளே !!

    0 comments:

    Post a Comment