தவியாய்த் தவிக்கும் இதயத்தின்
தாகம் தீர்த்திட வந்தவளே
புவிமேல் உனதருள் இல்லையெனில்
பூவும் பிஞ்சும் தோன்றிடுமா !!
கவியாய்ப் பொழிவேன் எந்நாளும்
காவல் தெய்வம் நின் புகளை
செவிதான் மகிழ வாழ்வனைத்தும்
செம் பட்டுடுத்திய அம்மாவே !
மருவத் தூராள் எனக் கேட்டால்
மலரும் சிரிக்கும் தன்னாலே !
புருவம் வியந்து பார்த்திடவே
பூமிப் பந்தாய்த் தெரிபவளே
உருவம் உனது உருவமொன்றே
உள்ளக் கதவைத் தட்டுதடி
வருவோர் போவோர் அனைவருக்கும் -நல்
வாழ்வு அளிக்கும் அம்மாவே ..!!
கொஞ்சும் மழலைக் குரல் கேட்டு
கூட வருவாய் என் தாயே
நெஞ்சம் இனிக்க நினைவுகளில் -நீ
நித்தம் இருந்தால் போதுமடி
அஞ்சும் மனநிலை மாறிவிடும்
ஆத்தா உனதருள் கிட்டிவிட்டால்
தொஞ்சும் போக வழியுண்டோ
தோல்வி எம்மைத் தழுவிடினும் !
வேப்பிலைக்கு ஈடாக என்றும்
வினைகள் தீர்க்கும் பராசக்தி
காப்பெடுக்கும் பக்தருக்கு நீ
கருணை பொழியும் மகாசக்தி !
பாப்புனைய வந்தேனே என்
பகுத்தறிவை வளர்த்து விடு
நாப்புரளும் போ தெல்லாம்
நல்ல துணை யாபவளே !!
Sunday 10 August 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment